Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு.. முழு விவரங்கள்..!

Mahendran
திங்கள், 5 மே 2025 (18:06 IST)
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததும், இந்திய பங்கு சந்தையில் நிலவும்  வளர்ச்சியும் இன்று ரூபாயின் மதிப்பை உயர்த்தியுள்ளன.
 
அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது, இன்று  இந்திய ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.84.33 ஆக நிலைபெற்றது.
 
வங்கிகளுக்கிடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இன்று ரூபாய் ரூ.84.45 என்ற மதிப்பில் வர்த்தகம் துவங்கி, ஒருசமயம் ரூ.84.10 என்ற உயர் நிலைக்கும் சென்றது. பின்னர், குறைந்தபட்சமாக ரூ.84.47 ஐத் தொட்டு, இறுதியில் ரூ.84.33 என்ற நிலைக்கு வந்து முடிந்தது.
 
 இன்றைய சந்தை நிலவரம், உலக சந்தையின் தாக்கமும், இந்தியாவின் பொருளாதார நம்பிக்கையும் ரூபாயின் மதிப்பை நேர்மறையாக நகர்த்தியுள்ளன.
 
ரூபாய் மதிப்பு மட்டுமின்றி இந்திய பங்குச்சந்தையும் இன்று நன்கு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 294.85 புள்ளிகள் உயர்ந்து  80,796.84 என வர்த்தகம் முடிந்தது. அதேபோல் நிப்டி  114.45 புள்ளிகள் உயர்ந்து 24,461.15 என முடிவுக்கு வந்தது.


Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments