Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு இடமில்லை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் கண்டனம்

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (10:18 IST)
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் நேற்றைய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நேற்று செங்கோட்டையில் விவசாயிகள் தங்களுடைய கொடியை ஏற்றி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து கூறிய ஆர்எஸ்எஸ் ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு இடமில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளது 
 
டெல்லியில் நடந்த வன்முறைகளும் செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டதுm கண்டனத்துக்கு உரியது என்றும் ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை என்றும் விவசாயிகளின் செயல் தேச ஒற்றுமைக்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் அவமானப்படுத்துவதாகும் என்றும் ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments