Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு திட்டத்தின் மூலம் மட்டும் ரூ.13000 கோடி சேமிப்பு: பிரதமர் மோடி தகவல்

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (08:34 IST)
மத்திய அரசின் ஒரே ஒரு திட்டத்தின் மூலம் மட்டும் 13 ஆயிரம் கோடி மக்களின் பணம் சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார்
 
 பாரதிய மக்கள் மருந்தகம் என்ற திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது என்பதும் இந்த திட்டத்தின் மூலம் மருந்துகள் மலிவு விலையில் விற்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
 
இதனால் ஏழை எளிய மக்களின் பணம் 13,000 கோடி வரை சேமிக்க பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏழைகள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டதாகவும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை தனியார் மருத்துவ மனைகளிலும் வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவு செய்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
 
இந்த திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 1ஆம் தேதி முதல் மக்கள் மருந்தகம் கொண்டாடப்படுவதாகவும் மருந்து உரிமையாளர்கள் மற்றும் மருந்தக பயனாளிகள் உடன் காணொளியில் பிரதமர் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதுவரை 13 ஆயிரம் கோடி அளவுக்கு ஏழை எளிய நடுத்தர மக்களின் பணம் சேமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments