Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவ பணியாளர் கைது!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (19:08 IST)
50 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவ பணியாளர் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனையில் பணம் பெற்றுக் கொண்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்ற பகுதியில் 50 ரூபாய்க்கு மருத்துவ பணியாளர் ஒருவர் தடுப்பூசி என்று போலியான மருந்தை ஒரு சிலருக்கு செலுத்தியுள்ளார். 50 வயதான மோகன்ராம் என்ற அந்த மருத்துவ பணியாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 
 
அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வாயு பிரச்சனைக்கு செலுத்தப்படும் ஊசிகளை கொரோனா தடுப்பூசி என ஏமாற்றி பொதுமக்களுக்கு செலுத்தி பணம் பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments