Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் ரூ.29க்கு பாரத் அரிசி விற்பனை.. ஓட்டாக மாறுமா?

Siva
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (07:19 IST)
நாடு முழுவதும் மலிவு விலையில் பாரத் அரசி விற்பனை செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் 29 ரூபாய்க்கு பாரத் அரசி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை தற்போது நடுத்தர ரக அரிசி விலை விற்பனை ஆகி வருகிறது. இந்த நிலையில் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு 29 ரூபாய்க்கு பாரத் அரிசி விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது

ஒரு கிலோ 29 ரூபாய்க்கு என ஐந்து மற்றும் பத்து கிலோ பைகள் விற்பனை செய்யப்படும் என்றும் அரிசியை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த  அரிசி   கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்டமாக 5 லட்சம் பிளான் அனுப்பப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. ஏற்கனவே கோதுமை, பருப்பு உள்பட ஒரு சில பொருட்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது அரிசியும் விற்பனை செய்யப்படுவதால் இதெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

இளம்பெண்ணை திருமண ஆசை கூறி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம்- குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்ற இராணுவ வீரர்!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments