Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்ரான்கான் கட்சி முன்னிலை.. சிறையில் இருப்பவர் பிரதமர் ஆவாரா?

Siva
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (07:13 IST)
பாகிஸ்தானில் நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வந்துள்ள தகவலின்படி இம்ரான் கான் கட்சி பல இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும் எனவே அக்கட்சி பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. 
 
பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்த நிலையில் இம்ரான்கான் கட்சி மக்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளதாக தெரிகிறது. தற்போது முன்னிலை விவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இம்ரான் கான் காட்சி மற்றும் அவரது ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 154 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதாக தெரிகிறது 
 
மேலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் நவாப் கட்சிகள் தலா 47 இடங்களில் முன்னிலை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
ஒரு சில வழக்குகளில் சிக்கி தற்போது சிறையில் இருக்கும் இம்ரான் கான் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் அதிபர் ஆவாரா அல்லது அவரது ஆதரவாளர்கள் யாராவது அதிபர் ஆவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments