ரூ.2 ஆயிரம் நோட்டு என்பது ஒரு சலுகை அல்ல...மக்களை ஏமாற்றும் செயல் -மம்தா பானர்ஜி

Webdunia
சனி, 20 மே 2023 (14:06 IST)
2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த   நிலையில், மேற்கு வங்க முதல்வர் இதற்கு கருத்து தெரிவித்துள்ளார். 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.   கறுப்பு பணத்தை  ஒழிக்கும் நடவடிக்கையாக, கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லாத நிலையில் நேற்று திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மக்கள் தங்களிடமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.

இதற்கு   நாடு முழுவதிலும் உள்ள பல அரசியல்வாதிகள் , எதிர்க்கட்சி தலைவர்கள்  கருத்துக்கள்  கூறி வருகின்றனர். இந்த நிலையில்,  மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இதுகுறித்து கூறியுள்ளதாவது:

''பணமிழப்பின்போது நாம் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறக்க முடியாதவை….அந்த கஷ்டத்திற்குக் காரணமானவர்ளை மன்னிக்கக்கூடாது.  ரூ.2 ஆயிரம் நோட்டு என்பது ஒரு சலுகையன்று , அது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல்…மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ''என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments