Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (14:52 IST)
பீகாரில் கடந்த 2 நாட்களில் நடந்த போராட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக  தகவல். 
 
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத்  என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருவது என்பது தெரிந்ததே. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயிலுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 
 
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் கடந்த 2 நாட்களில் நடந்த போராட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தானாபூர் ரயில்வே மேலாளர் பிரபாத் குமார் தெரிவித்துள்ளார். 50 ரயில் பெட்டிகள், 5 ரயில் எஞ்சின்கள் ஆகியவை போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டுள்ளதாக தானாபூர் ரயில்வே தெரிவித்துள்ளது.
 
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மட்டுமின்றி பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments