ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1000 கோடி நன்கொடை வசூல் !

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (22:09 IST)
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.1000 கோடி வரை நன்கொடை வசூலாகியுள்ளதாக  பெஜாவர் மடாதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.

யோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்தது. இதற்கான அடிக்கல்நாட்டுவிழா கடந்தாண்டு ஆக்ஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது.

இக்கோயில் சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்கள் உடைய பிரமாண்டமான கட்டப்பட்டவுள்ளது.


இக்கோயிலைக் கட்டுவதற்கான நிதிதிரட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நிதி கொடுத்தார். ஜனாதிபதி உள்ளிட்ட நாடு முழுவதிமும் இருந்து பலரும் இதற்கான நிதி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியுமான விஸ்வபிரசன்னா தீர்த்த சுவாமி இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :

இந்தியாவிலுள்ள அனைத்துத் தரப்பினரும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை கொடுத்து வருகின்றனர். இது மக்களின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு சான்றாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments