Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாவத் புயல் எதிரொலி: 2 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:13 IST)
ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருமாறி இருக்கும் நிலையில் இந்த புயலுக்கு ஜாவத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தீவிர புயலாக மாறி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை இடையே நாளை மறுநாள் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா வழியாக செல்லும் 95 விரைவு ரயில்கள் இன்று முதல் 3 நாட்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மேலும் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் புயல் பாதிப்பு பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அத்தியாவசிய சேவைகள் பொதுமக்களுக்கு தடை இல்லாமல் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments