Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்.. ரிலீஸுக்கு புள்ளி வைக்கும் சுகேஷ் சந்திரசேகர்!

Prasanth Karthick
திங்கள், 13 ஜனவரி 2025 (10:34 IST)

பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், தான் பல கோடி ரூபாயை வரியாக செலுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.

 

 

உலக அளவில் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் மற்றும் உள்நாட்டில் பண ரீதியான மோசடிகள் என பல குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விடுதலையாவதற்காக பல முயற்சிகளை சுகேஷ் மேற்கொண்டு வருகிறார்.

 

அந்த வகையில் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் கடிதம் ஒன்றை வழக்கறிஞர் மூலமாக எழுதியுள்ளார். அதில் அமெரிக்காவில் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் மூலம் நடப்பு ஆண்டில் தான் ஈட்டிய ரூ.22,410 கோடியை இந்திய வருவாய் கட்டமைப்புக்குள் கொண்டு வர விரும்புவதாகவும், அதனால் ரூ.7,640 கோடியை வரியாக செலுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

 

ஆனால் இது அவர் நேர்மையால் எழுதிய கடிதம் அல்ல, மாறாக தன்னை விடுதலை செய்வதற்காக மத்திய அரசிடம் விலை பேசும் விதமான முயற்சி என பலர் இதை விமர்சித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்வெளி நாயகா..! பூமி திரும்பிய சுபன்ஷூ சுக்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து! கேக் வெட்டி கொண்டாட்டம்!

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments