Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய 500 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியீடு: ரிசர்வ் வங்கி

புதிய 500 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியீடு: ரிசர்வ் வங்கி
, செவ்வாய், 20 டிசம்பர் 2016 (11:40 IST)
புதிய 500 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை வெளியிட போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 


 

 
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டிகளை திரும்ப பெர்றுக்கொண்ட ரிசர்வ் வங்கி, புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 100 ரூபாய் நோட்டு தட்டுபாடு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
அதில், புதிய 500 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு 500 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளின் அம்சங்களையும் வெளியிட்டுள்ளது. 
 
புதிய 500 ரூபாய் நோட்டுகளின் எண்கள் வரிசையில் 'R' என்ற எழுத்தும், புதிய 50 ரூபாய் நோட்டுகளின் எண்கள் வரிசையில் 'L' என்ற எழுத்தும் இருக்கும். இந்த நோட்டுகள் மகாத்மா காந்தி படத்துடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும் என்று தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. எங்களை ஒதுக்கி வைக்கவில்லை - தீபா பரபரப்பு பேட்டி