Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பொருளாதாரம் உயர தொடங்கியுள்ளது! – ஆர்பிஐ ஆளுநர் விளக்கம்!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (13:07 IST)
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்த நிலையில் தற்போது பொருளாதாரம் உயர தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதலாக கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு தொழில்கள் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில் தற்போது ஊரடங்கு விதிகளில் தொழில்வளர்ச்சிக்காக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ரிசர் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் ”இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் – மே மாதம் முதலாக உயரத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் ஊரக பொருளாதார வளர்ச்சி விரைவில் வலிமையாக உருவெடுக்கும்” என கூறியுள்ளார்.

மேலும் உலக அளவிலேயே பொருளாதார மந்தநிலை நிலவி வருவதாக கூறியுள்ள அவர் இந்தியா விரைவில் பொருளாதார வளர்ச்சியை அடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments