Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

Mahendran
சனி, 7 ஜூன் 2025 (10:09 IST)
இந்திய ரிசர்வ் வங்கி  புதிய அறிவிப்பின் மூலம், நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் பெற அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு, இந்த வரம்பு 75 சதவீதமாக இருந்தது. 
 
தற்போது ரூ.2.5 லட்சம் வரை வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு மட்டும் இந்த புதிய விதி பொருந்தும். ஒரே நபருக்கு ஒருமுறை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முந்தைய மாதங்களில், நகைக் கடன்கள் தொடர்பான பல கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி முன்மொழிந்தது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்வினை உருவானதால், மத்திய அரசு அந்த விதிமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
புதிய அறிவிப்பு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக இருப்பதுடன், அவசர நிதி தேவைகளை சந்திக்க உதவியாக இருக்கும். குறிப்பாக, பொது வங்கிகள் 75% வரம்பை கடைப்பிடித்து வந்த நிலையில், சில தனியார் மற்றும் நிதி நிறுவனங்கள் 88% வரை கடன் வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
இது போன்ற நடவடிக்கைகள் நகைக் கடன் முறையை மேலும் சீரமைத்து, நம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments