Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் வெள்ளம் ஏற்பட எலிகள் தான் காரணம்; கண்டறிந்த பாஜக அமைச்சர்

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (19:05 IST)
பீகாரில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு எலிகள்தான் காரணம் என பாஜக எம்.பி. ராஜிவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.


 

 
வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அசாம், பீகார், மும்பை உள்ளிட்ட பகுதியில் வெள்ளத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். பீகார் வெள்ளிப்பெருக்கு ஏற்பட்டதற்கு எலிகள்தான் காரணம் என பீகார் பாஜக எம்.பி. ராஜிவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
பீகார் மாநிலத்தில் 21 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏரிக்கரையோரம் வாழும் மக்கள் வீசும் உணவு பொருட்களை சாப்பிட எலிகள் வருகின்றன். அந்த எலிகள் ஏரிக்கரைகளை தோண்டி பாதிப்பை ஏற்படுத்திவிட்டன். இதனால் கரைகள் உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து விட்டது. 
 
எலிகள் ஏற்படுத்திய குழிகளை கண்டுபிடித்து அவற்றை மூடி, 3 நாட்களில் ஏராளமான பகுதிகள் வெள்ள நீரில் மூழ்குவதில் இருந்து காப்பாற்றினோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments