Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணை உடைந்ததற்கு நண்டுகள் தான் காரணம்: அமைச்சரின் வேடிக்கையான கருத்து

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (18:28 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையில் ரத்னகிரி அணை உடைந்ததற்கு காரணம் நண்டுகள் தான் என, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தனஜி சவந்த் விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வாரம் தொடக்கத்தில் 4 நாட்கள் கன மழை பெய்தது. இந்த மழையில் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள திவாரே அணை உடைந்தது.

அணை உடைந்ததால், அதனை சுற்றியுள்ள 7 கிராமங்களிலுள்ள குடியிறுப்புகள் சேதம் அடைந்தன. மேலும் 18 பேர் உயிரிழந்தனர்.

இதனை குறித்து மகாராஷ்டிராவின் நீர் மேலாண்மைத் துறை அமைச்சர் தனஜி சவந்த், அந்த பகுதியிலுள்ள நண்டுகளால் தான், திவேரே அணை பலவீனமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தால் ரத்னகிரி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் 8 மணி நேரத்தில் 192 மி,மீ, அளவுக்கு மழை பெய்துள்ளது என்றும், பெய்தது மழையா அல்லது வானம் பொத்துகொண்டு விழுந்ததா எனவும் தெரியவில்லை எனவும் தனஜி சவந்த் கூறியுள்ளது பெரும் வேடிக்கையாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments