Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு: மோடி, சுந்தர் பிச்சை உள்பட பிரபலங்கள் இரங்கல்..!

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு: மோடி, சுந்தர் பிச்சை உள்பட பிரபலங்கள் இரங்கல்..!

Siva

, வியாழன், 10 அக்டோபர் 2024 (07:07 IST)
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று காலமான நிலையில், அவரது மறைவிற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர் ரத்தன் டாடா என்றும், அவருடைய அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் சுந்தர் பிச்சை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், ரத்தன் டாடா மறைவுக்கு உலகின் முன்னணி தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், ரத்தன் டாடா அவர்கள் ஒரு தொலைநோக்கு வணிக தலைவர், இரக்கமுள்ள ஆன்மாவை கொண்டவர், அசாதாரண மனிதர்' என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 'இந்தியாவின் பழமையான, மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றுக்கு அவர் தலைமை தாங்கினார். அதே நேரத்தில், அவரது பங்களிப்பு மிகப்பெரியது. அவரது பணிவு மற்றும் இரக்கம் ஆகியவற்றின் மூலம் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பண்புகளை கொண்டவர். அவர் பலரை நேசித்தார்,' என்றும் மோடி பதிவு செய்துள்ளார்."

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!