Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை: முதல்வர் அதிரடி

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (06:30 IST)
ஹரியானா மாநிலத்தில் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில்  12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நேற்று ஹரியானா மாநிலத்தின் கர்னல் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மனோகர் லால் கட்டார், '12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளை தூக்கில் போட வகை செய்யும் விதத்தில் புதிய சட்டம் மாநில அரசால் விரைவில் இயற்றப்படும் என்றும் அதே சமயம் கற்பழிப்பு சம்பவங்களின் உண்மை தன்மையை உறுதி செய்த பின்னரே இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒருபுறம் சிறுமிகளின் கற்பழிப்பு சம்பவம் அதிகரித்து வந்தாலும் போலியான கற்பழிப்பு புகார்களில் அப்பாவிகளும் சிக்குகின்றனர் என்பதும் கடந்த ஆண்டில் பதிவான கற்பழிப்பு புகார்களில் 25 சதவீதம் பொய்யானவை என்று கண்டறியப்பட்டதே இதற்கு சான்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments