ராமர் கோயில் பாதைகளில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான விளக்குகள் திருட்டு.. பக்தர்கள் அதிர்ச்சி..!

Mahendran
புதன், 14 ஆகஸ்ட் 2024 (10:08 IST)
அயோத்தி உள்ள ராமர் செல்லும் பாதையில் போடப்பட்டு இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள்  திருடப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கடந்த ஜனவரி  மாதம் திறக்கப்பட்ட நிலையில் பிரதமர்  நரேந்திர  மோடி முதல் நாளில் பால ராமரை தரிசனம் செய்தார்.

இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு 6 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதையில் போடப்பட்டு இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள் மற்றும் 3,800 மூங்கில் விளக்குகள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அயோத்தி  போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அயோத்தி வளர்ச்சி குழுமம் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த விளக்குகளை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த விளக்குகள் திருடப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments