Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகாசா ஏர்லைன்ஸ் உரிமையாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்!

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (11:18 IST)
ஆகாசா ஏர்லைன்ஸ் உரிமையாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்!
பிரபல தொழிலதிபரும் பங்குச்சந்தை நிபுணருமான  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவின் வாரன் பஃபெட் என்று போற்றப்படுபவரும் ஆகாச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று காலமானார். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கிய போது  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நேரில் வந்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
 
மறைந்த அவர்களுக்கு வயது 62 என்பது குறிப்பிடத்தக்கது.   ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது
 
 ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் அறிக்கையில் இந்தியாவின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வத்துடன்  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருந்ததாகவும் அவரது மறைவு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments