பெரும்பான்மை இருந்தும் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் தோல்வி.. கட்சி மாறி ஓட்டு போட்டார்களா?

Siva
புதன், 28 பிப்ரவரி 2024 (07:40 IST)
நேற்று மாநிலங்களவை  தேர்தல் நடந்த நிலையில் பெரும்பான்மை இருந்தும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தலில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
மாநிலங்களவை  தேர்தலை பொறுத்தவரை எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மட்டுமே வாக்கு செலுத்துவார்கள் என்பதால் பெரும்பாலும் அவரவர் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்கு செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மிக அரிதாக மட்டுமே மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்குகள் விழும் என்ற நிலையில் நேற்று நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வி அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்றைய தேர்தலில் ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்கு செலுத்தியதாகவும் அதனால் பெருன்பான்மை இருந்தும் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்ய கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரை காங்கிரஸ் தலைமை அனுப்பி இருப்பதாகவும் கட்சி மாறி ஓட்டு போட்டவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments