Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் விவசாயி மகன்தான்; எனக்கும் விவசாயம் தெரியும்! – எடப்பாடியார் ஸ்டைலில் ராஜ்நாத்சிங்!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (10:07 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சிகள் பேசி வரும் நிலையில் தானும் விவசாயம் செய்தவன் என்றும், விவசாயம் குறித்து தெரியும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தொடர்ந்து வேளாண் சட்டங்களை விமர்சித்து வருகின்றன. முக்கியமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மத்திய அரசு மீது காட்டமான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் “ராகுல்காந்தியை விட விவசாயம் பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். வேளாண் சட்டங்கள் மக்களுக்கு நன்மையை அளிக்க கூடியவை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments