Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் விவசாயி மகன்தான்; எனக்கும் விவசாயம் தெரியும்! – எடப்பாடியார் ஸ்டைலில் ராஜ்நாத்சிங்!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (10:07 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சிகள் பேசி வரும் நிலையில் தானும் விவசாயம் செய்தவன் என்றும், விவசாயம் குறித்து தெரியும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தொடர்ந்து வேளாண் சட்டங்களை விமர்சித்து வருகின்றன. முக்கியமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மத்திய அரசு மீது காட்டமான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் “ராகுல்காந்தியை விட விவசாயம் பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். வேளாண் சட்டங்கள் மக்களுக்கு நன்மையை அளிக்க கூடியவை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments