Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சர்..

Arun Prasath
வியாழன், 19 செப்டம்பர் 2019 (11:31 IST)
தேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ராஜ்நாத் சிங்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம், இந்தியாவில் உருவாக்கப்பட்ட குறைவான எடையுள்ள ஜெட் ஃபைடர் ஆகும்.

இந்நிலையில் இன்று பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகை தந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் விமானத்தில் வீரர்கள் அணிந்து கொள்ளும் சீருடையை அணிந்து கொண்டு தேஜஸ் விமானத்தில் பறக்க தயாரானார். பின்னர் தேஜஸ் விமானத்தில் அவரும், விமான படை தளபதி என்.திவாரியும் பறந்து சென்றனர்.

இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments