Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிடிக்க முயன்றபோது கடித்த நாகப்பாம்பு! – பிரபல ‘பாம்பு மனிதர்’ மரணம்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (09:44 IST)
ராஜஸ்தானில் பாம்பு பிடிக்கும் வன உயிர் ஆர்வலர் ஒருவர் பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷாரு பகுதியை சேர்ந்தவர் வினோத் திவாரி. கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணியை செய்து வரும் இவர், குடியிருப்பு பகுதிகளில் நுழையும் பாம்புகளை பிடித்து வனப்பகுதிகளில் விடும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருந்தார்.

சமீபத்தில் கொஹமெடி பகுதியில் உள்ள கடை ஒன்றிற்குள் பாம்பு புகுந்துவிட்டதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அப்பகுதிக்கு சென்ற வினோத் பாம்பை பிடித்துள்ளார். பின்னர் அதை பைக்குள் நுழைக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக நாகப்பாம்பு அவரை தீண்டியது.

இதனால் அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு நடந்து சென்றுள்ளார். ஆனால் சில நிமிடங்களிலேயே விஷம் உடலில் பரவியதால் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments