Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பி எடுத்தபோது பாய்ந்த மின்னல்; கண பொழுதில் 11 பேர் பலி!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (11:02 IST)
ராஜஸ்தானில் மின்னல் தாக்கியதில் ஒரே சமயத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று சின்னமான அமர் மகாலுக்கு மக்கள் சுற்றுலா செல்வது வாடிக்கையாக உள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கோபுரம் மீது நேற்று பலர் ஏறி செல்பி எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கிய பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமர் மகால் மட்டுமல்லாமல் ராஜஸ்தானின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மின்னல் தாக்கி உயிரிழந்த இந்த கோர விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் அசோக் கெலாட் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments