Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதஞ்சலியின் கொரோனா மருந்து விற்றால் நடவடிக்கை! – அமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (08:30 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இயலாமல் உலக நாடுகள் திணறி வரும் சூழலில் கொரோனா மருந்து என பதஞ்சலில் மருந்து ஒன்றை விற்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான மருந்து என கொரோனில் மற்றும் சுவாசரி என்ற இரண்டு மருந்துகளை விளம்பரம் செய்து வருகிறது. ஆனால் இந்த மருந்துகள் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி பெறாதவை. இந்த மருந்துகளை ஆய்வு செய்ய கூறப்பட்டிருக்கும் நிலையில் இந்த மருந்துகளை உபயோகிக்க வேண்டாம் எனவும் பலர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில சுகாதார துறை அமைச்சர் ரகு சர்மா “பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விற்கும் கொரோனா மருந்துகள் அரசின் சான்று பெறாதவை. எனவே அதை விற்பனை செய்வது குற்றமாகும். ராஜஸ்தானில் பதஞ்சலியின் கொரோனா மருந்துகள் விற்கப்பட்டால் விற்பவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments