Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் இறந்த தந்தை; தீயில் பாய்ந்த மகள்! – ராஜஸ்தானில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 6 மே 2021 (08:55 IST)
ராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையை எரித்தபோது மகள் தீயில் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதர்தாஸ் சர்தா. கடந்த சில நாட்களுக்கு முன்னால் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது உடலை சடங்குகள் செய்து எரியூட்டியுள்ளனர். அப்போது அவரது இளைய மகள் நெருப்பில் பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனிருந்தவர்கள் உடனடியாக அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் 70 சதவீத தீக்காயங்களோடு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments