Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலித் இளைஞரை தாக்கி சிறுநீர் கொடுத்த கும்பல்! – ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!

தலித் இளைஞரை தாக்கி சிறுநீர் கொடுத்த கும்பல்! – ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!
, ஞாயிறு, 30 ஜனவரி 2022 (16:08 IST)
குஜராத்தில் இளைஞர் ஒருவரை கும்பல் தாக்கி சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் சாதியரீதியான ஒடுக்குமுறைகள் அவ்வபோது நடைபெறும் நிலையில் அதுகுறித்து கடுமையான நடவடிக்கைகளும் பல சமயங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தை சேர்ந்த தலித் சமுதாய இளைஞர் ராகேஷ் மேக்வால் என்பவரை கும்பல் ஒன்று இரவு கடத்தி சென்றுள்ளனர்.

அந்த கும்பலுக்கு ஏற்கனவே ராகேஷ் மீது விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுபாட்டிலில் சிறுநீரை ஊற்றி அதை குடிக்குமாறு அந்த கும்பல் மிரட்டியதாகவும், ராகேஷ் மறுத்ததால் அவரை அடித்து துன்புறுத்தி வலுகட்டாயமாக சிறுநீரை வாயில் ஊற்றியதாகவும், சாதிய ரீதியாக இழிவாக பேசியதாகவும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் உமேஷ் ஜாட் மற்றும் பீர்பால் என்ற இருவரை கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவின் மதவெறி அரசியலை அம்பலப்படுத்துங்கள்! – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!