Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிகுறி இல்லாமல் அட்டாக் செய்த கொரோனா! – தனிமைப்படுத்தி கொண்ட முதல்வர்!

அறிகுறி இல்லாமல் அட்டாக் செய்த கொரோனா! – தனிமைப்படுத்தி கொண்ட முதல்வர்!
, வியாழன், 29 ஏப்ரல் 2021 (10:38 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் ராஜஸ்தான் முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் முதல் அலையில் இல்லாத அளவு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறிகள் ஏதுமின்றி அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தன்னை தானே அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பாதித்த 1049 பேர் தலைமறைவு! – பீதியில் திருப்பதி மக்கள்!