Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி பரிசு

தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி பரிசு
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (14:00 IST)
தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். 
 
10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவானி லெகாரா தங்கம் வென்று சாதனை செய்துள்ளார். துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைப்பது இதுவே முதல் முறை என்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். வெள்ளி வென்ற தேவேந்திராவுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வென்ற சுந்தர் சிங்கிற்கு ரூ.1 கோடி பரிசு எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஒத்திவைக்கப்படும் பள்ளிகள் திறப்பு? – முதல்வர் முக்கிய ஆலோசனை!