Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் மாடு எப்படி ரயில்ல மோதும்..? ரயில்வேயின் பலே ப்ளான்!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (12:56 IST)
ரயில் தண்டவாளங்களில் கால்நடைகள் மோதி விபத்திற்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதை தடுக்க புதிய திட்டத்தை ரயில்வே செயல்படுத்த உள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தினம்தோறும் பல ரயில்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு ரயில்கள் இயங்கும் தண்டவாளப் பகுதிகளில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், யானை போன்ற வன உயிர்கள் குறுக்கே செல்வதால் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகின்றன. ரயிலும் சேதமடைகிறது.

சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மாடு மோதிய சம்பவத்தில் ரயிலின் முன்புறம் சேதமடைந்தது. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க முதற்கட்டமாக தண்டவாளத்தின் பக்கவாட்டில் 1000 கி.மீ தூரத்திற்கு சுவர் எழுப்ப ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், சுற்றுசுவர் அமைக்க சில டிசைன்கள் ஆலோசிக்கப்பட்டு ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாத காலத்திற்கு ஆயிரம் கிலோ மீட்டருக்கு இந்த தடுப்பு சுவர்கள் அமைக்க உள்ளதாகவும் அவர் தெரிசித்துள்ளார். மேலும் இந்த சுற்றுசுவர் அமைப்பது அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்பதிலும் கவனமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments