Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல்.. 1 கோடி ரூபாய் பணத்துடன் 6 பேர் கைது..!

Mahendran
சனி, 23 ஆகஸ்ட் 2025 (13:50 IST)
இந்தியாவின் மிக உயர்தர ரயில்களில் ஒன்றான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மூலம் கடத்தப்பட இருந்த ரூ.54 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பெங்களூரு மற்றும் போபாலில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
 
மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம்  மேற்கொண்ட 'ஆபரேஷன் வீட் அவுட்' நடவடிக்கையின் கீழ், பெங்களூரு மற்றும் போபால் ரயில் நிலையங்களில் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் கடத்தப்படவிருந்த ஹைட்ரோபோனிக் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பெங்களூரில் 29.88 கிலோவும், போபாலில் 24.18 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரண்டு போதைப்பொருள் சரக்குகளும் தலைநகர் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட இருந்தவை.
 
இந்த நடவடிக்கையுடன், தாய்லாந்தில் இருந்து திரும்பிய ஒரு நபர் பெங்களூரு ஹோட்டல் ஒன்றில் 18 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் பிடிபட்டார். இந்த கடத்தல்களுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி டெல்லியில் ரூ.1.02 கோடி பணத்துடன் கைது செய்யப்பட்டார். மொத்தமாக, இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்தக் கடத்தல், போபாலை மையமாக கொண்ட ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல்  கும்பலுடன் தொடர்புடையது என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் திட்டம்: ₹2,126 கோடி நிதி ஒதுக்கீடு

சபரிமலை வரும் பக்தர்களுக்கு 3 நாட்கள் சிறப்பு விருந்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments