Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா, பாரத் ஆகிய இரண்டு வார்த்தைகள் பற்றி ராகுல்காந்தி கருத்து

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (17:44 IST)
அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்காக இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அத்துடன் தங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தி வருகிறது.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், மத்திய பாஜக அரசு, ஜி20 அழைப்பிதழ் மற்றும் பிரதமர் மோடியின் பெயர்ப் பலகையில் பாரத் என்ற பெயர் இடம்பெற்றது.

இதுபற்றி கேரளா, வயநாடு தொகுதி எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி, ''இந்தியா, பாரத் ஆகிய  இரண்டு வார்த்தைகளுமே ஏற்றுக் கொள்ளக்கூடியவைதான். இந்தியா, பாரத் ஆகிய இரண்டு சொல்லையும் அரசியலமைப்பு பயன்படுத்துகிறது. எங்கள் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டது பாஜகவுக்கு எரிச்சல் உண்டாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.  மேலும், சாதிய கட்டமைப்பை பாதுகாக பாஜக என்டஹ் எல்லைக்கும் செல்லும், ஆதிக்கம் செலுத்துபவர்களால ஒருசிலர் மட்டுமே இருக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments