Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி: தீபாவளிக்கு பின்னர்!

காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி: தீபாவளிக்கு பின்னர்!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2017 (10:35 IST)
அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி தீபாவளிக்கு பின்னர் அந்த கட்சியின் தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.


 
 
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ள சோனியா காந்தி அவ்வப்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நீண்ட காலமாக தலைமை பதவிக்கு தன்னை தயார்ப்படுத்தி வரும் ராகுல் காந்தி விரைவில் தலைவர் பொறுப்பை ஏற்பார் என பல நேரங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் ராஜீவ் குடும்பத்துக்கு நெருக்கமானவருமான சச்சின் பைலட் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில், தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ராகுல் காந்தி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார் என கூறியுள்ளார்.
 
மேலும், துணைத்தலைவராக இருந்து ராகுல் கட்சிக்காக நிறைய செய்திருக்கிறார். ராகுல் காந்தி மூலம் கட்சி மேலும் பலம் பெறும். வாரீசு அரசியல் ஒரு பிரச்சனையே இல்லை. பல கட்சிகளில் வாரிசுகள் அரசியலில் உள்ளனர். அவர்களால் கட்சிக்கு என்ன பலம் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். ராகுல் காந்தியின் தலைமை பொறுப்பேற்பு தீபாவளிக்கும் பின்னர் இருக்கும் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments