Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்..!

Mahendran
செவ்வாய், 2 ஜூலை 2024 (13:27 IST)
அவை குறிப்பில் நீக்கப்பட்ட தனது உரையின் சில பகுதிகளை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பாராளுமன்றத்தின் மக்களவையில் பேசிய போது சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக கூறப்பட்டது. குறிப்பாக இந்து மதம் குறித்து அவர் விமர்சனம் செய்ததாகவும் நீட் தேர்வு மற்றும் அதானி, அம்பானி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் அந்த கருத்துக்கள் அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. 
 
ராகுல் காந்தியின் உரையின் சில பகுதிகளை அவை குறிப்பில் இருந்து நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிரகாஷ் கடிதம் எழுதி உள்ளார். 
 
அந்த கடிதத்தில் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட தனது உரையின் பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் அவை குறிப்பில் இருந்து தனது கருத்துக்களை நீக்கியது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments