Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க முடியாது: காங்கிரஸ் திட்டவட்டம்

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க முடியாது: காங்கிரஸ் திட்டவட்டம்
, புதன், 20 ஜூலை 2016 (09:32 IST)
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தொடர்பு உள்ளது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


 
 
இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டால் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரலாம் என நீதிமன்றம் நேற்று மீண்டும் அறிவுறுத்தியது.
 
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 
ராகுல் காந்தி வரலாற்று உண்மைகளுடன் நெருக்கமான அறிவை பெற்றுள்ள ஒரு முதிர்ந்த அரசியல்வாதி. அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கோர வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. அதனை உரிய நீதிமன்றத்தில் நிரூபிக்க தயார் என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் கார்டு கட்டாயம்