Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துகிறது பாஜக! – ராகுல்காந்தி!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (11:29 IST)
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கிட்டத்தட்ட முடிவடைய உள்ள நிலையில் யாத்திரையின் நோக்கம் குறித்து ராகுல்காந்தி பேசியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாக்குமரியில் தனது யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி என பல மாநிலங்களை தாண்டி பயணித்து வருகிறார்.

100 நாட்களை தாண்டி நடந்து வரும் இந்த இந்திய ஒற்றுமை பயணம் விரைவில் முடிவடைய உள்ளது. இதன் நிறைவு விழாவிற்கு காங்கிரஸ் 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த யாத்திரை குறித்து பேசியுள்ள ராகுல்காந்தி “நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறை சூழல் பரவி வருகிறது. ஒரு மதத்திற்கு எதிராக மற்றொரு மதத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மோத வைக்கிறது. ஆனால் நாங்கள் அன்பு, சகோதரத்துவ பாதையை நாட்டுக்கு காட்ட முயன்றோம். எனவேதான் இந்த யாத்திரையை தொடங்கினோம்.

வெறுப்பு, வன்முறை, வேலையில்லா திண்டாட்டம், விலவாசி உயர்வு உள்ளிட்டவை தான் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை. இந்த பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பவும், அதற்கு எதிராக போராடவும்தான் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.. அதிர்ச்சி தகவல்..!

சென்னை எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு..!

இந்த கைது பூச்சாண்டிக்கெல்லாம் நாங்கள் பயந்து பின்வாங்கப்போவதில்லை.. அண்ணாமலை

2வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் பழைய நிலைக்கு செல்லுமா?

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் திடீர் கைது.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments