Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

Siva
ஞாயிறு, 16 ஜூன் 2024 (13:20 IST)
மின்னணு வாக்கு எந்திரத்தின் பயன்பாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும் என எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் ஆணையம் முறையாக செயல்படாததால் நமது ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுகிறது. 
 
தேர்தல் நடைமுறையில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காததால் மோசடி மூலம் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டப்படும் ஆபத்து உள்ளது என ராகுல் காந்தி எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யப்படும் ஆபத்து அதிகமாக இருப்பதால் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டிற்கு முடிவு கட்ட வேண்டும் என எலான்மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் நேற்று பதிவு செய்திருந்தார். 
 
மும்பையில் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். எலான் மஸ்க் அவர்களின் இந்த கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு முடிவு கட்டப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments