Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

700 விவசாயிகளின் குடும்பங்களின் நிலை என்ன? ராகுல் கேள்வி!

700 விவசாயிகளின் குடும்பங்களின் நிலை என்ன? ராகுல் கேள்வி!
, வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:33 IST)
விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை. 

 
இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது, விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போராட்டத்தில் உயிர்நீத்த 152 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டை பஞ்சாப் அரசு தந்துள்ளது. உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் பஞ்சாப் அரசு உறுதியளித்துள்ளது. 
 
வேளாண் சட்டங்களை அமல்படுத்தி தவறு செய்ததாக மன்னிப்புக்கோரிய பிரதமர் நிவாரணம் தரமறுப்பது ஏன்? உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தார். அதோடு டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெளியிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோந்து பணியில்... துப்பாக்கி எடுத்துச் செல்ல போலீஸாருக்கு அனுமதி !