Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

Siva
செவ்வாய், 7 மே 2024 (14:28 IST)
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம் என்றும் ஏழை பெண்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குவோம் என்றும் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் மூன்றாவது கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதை தெரிந்தது.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி ’ஏழைகள் பின்தங்கியவர்கள் பழங்குடியினர் உரிமையை பறிப்பதற்கு பாஜக திட்டமிடுவதாகவும் அரசியல் அமைப்பை அழிக்கவே நினைக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்தால் கோடிக்கணக்கான ஏழை மக்களை லட்சாதிபதி ஆக்குவோம் என்றும் ஏழை பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்ச ரூபாய் வழங்குவோம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். அவரது இந்த தேர்தல் பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments