Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நமது நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது: லடாக்கில் இருந்து திரும்பிய ராகுல் காந்தி அதிர்ச்சி தகவல்..!

நமது நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது:  லடாக்கில் இருந்து திரும்பிய ராகுல் காந்தி அதிர்ச்சி தகவல்..!
, புதன், 30 ஆகஸ்ட் 2023 (10:43 IST)
லடாக்கில் உள்ள நமது நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இது அந்த பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் லடாக்கிலிருந்து திரும்பிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் சீனா வெளியிட்ட வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளை சீனாவின் பகுதியாக உள்ளடக்கி வெளியிட்டு இருந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் லடாக் என்ற ராகுல் காந்தி லடாக்கில் இருந்து ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனா கைப்பற்றவில்லை என பிரதமர் மோடி பொய் சொல்லி வருகிறார் என்றும் நான் லடாக்கில் இருந்து தான் வருகிறேன் என்றும் நமது நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிந்து உள்ளது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் அருணாச்சலப் பிரதேச பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக பேச வேண்டும் என்றும் காங்கிரஸ் என்பி ராகுல் காந்தி தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை: தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்..!