Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானிக்கு பின்னாடி யார் இருக்கான்னு தெரியுமா? – ராகுல்காந்தி!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:26 IST)
நாடாளுமன்ற கூட்டத்தில் அதானி மோசடி விவகாரத்தை பற்றி பேசுவதை தடுக்க பிரதமர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த கூட்டத்தொடரின்போது அதானி பங்குசந்தை மோசடி குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அதானி விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி “நான் பல ஆண்டுகளாக மத்திய அரசு பற்றியும், தொழில் அதிபர்களுடனான நெருக்கம் பற்றியும் கூறி வருகிறேன். அதானி விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்.

ஆனால் மத்திய அரசு விவாதம் நடத்த விரும்பாமல் அதை கண்டு பயப்படுகிறது. விவாதம் நடப்பதை தவிர்க்க தன்னா இயன்றதை எல்லாம் பிரதமர் மோடி செய்வார். கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வெளியே வர வேண்டும். அதானிக்கு பின்னால் உள்ள சக்தி யார் என நாடு தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகின் நம்பகத்தன்மை வாய்ந்த பட்டியல்.. முதல் 10 இடங்களில் இந்தியாவின் ஒரே ஒரு வங்கி..!

காலை சிற்றுண்டி திட்டத்தின் 'டெண்டர்' மறுபரிசீலனை? மேயர் பிரியா ஆலோசனை..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த 2 பக்தர்கள் உயிரிழப்பு.. கூட்ட நெரிசல் காரணமா?

47 ஆயிரம் பள்ளிக்கல்வித்துறை தற்கால பணியாளர்கள் நிரந்தரம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

மீண்டும் 13 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை.. துப்பாக்கி சூடு நடத்தியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments