Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னியாகுமரி - காஷ்மீர்.. ராகுல் காந்தியின் பாதயாத்திரையால் பயனில்லையா?

கன்னியாகுமரி - காஷ்மீர்.. ராகுல் காந்தியின் பாதயாத்திரையால் பயனில்லையா?
, ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (16:36 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்திய நிலையில் வழியெங்கும் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த எழுச்சி ஐந்து மாநில தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இன்று காலை வெளியான தேர்தல் முடிவுகளில் தெலுங்கானா தவிர மற்ற மூன்று முக்கிய மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. அப்படி என்றால் ராகுல் காந்தியின் பாதயாத்திரை மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட வில்லையா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர்

இரண்டாம் கட்ட பாதயாத்திரை ராகுல் காந்தி தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் முதல் கட்ட பாதயாத்திரைக்கு எழுச்சி இல்லாத நிலையில் அந்த பாதயாத்திரை நடைபெறுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

மொத்தத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி 5 மாநில தேர்தலில் மண்ணை கவ்வியுள்ளதால் பாராளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது இப்போதே தெரிந்து விட்டது என்று பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரங்கிமலை ரயில் நிலைய பார்க்கிங் மூடப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு