Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்திக்கு பாதுகாப்பு இல்லை..! பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.! அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்..!!

Senthil Velan
புதன், 24 ஜனவரி 2024 (14:44 IST)
அசாமில் தேசிய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது.
 
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடை பயணமான தேசிய ஒற்றுமை நீதி பயணம் கடந்த ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. நேற்று அசாம் மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
 
இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
 
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார்.

ALSO READ: அயோத்தியில் 2-வது நாளாக குவிந்த பக்தர்கள்.! கடும் குளிரிலும் விடிய விடிய காத்திருப்பு..!!
 
அந்த கடிதத்தில், அசாமில் தேசிய ஒற்றுமை நீதிக்கான பயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அசாம் முதல்வர் மற்றும் டிஜிபிக்கு தகுந்த உத்தரவை வழங்க வேண்டும் என்று  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments