Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் சமூகநீதித் தென்றல் வீசட்டும்!'' -அன்புமணி ராமதாஸ்

Sinoj
புதன், 24 ஜனவரி 2024 (14:40 IST)
பிகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், சோசலிசத் தலைவருமான கர்ப்பூரித் தாக்கூருக்கு  பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து,  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ''கர்ப்பூரித் தாக்கூருக்கு  பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும்,  நாடு முழுவதும் சமூகநீதித் தென்றல் வீசட்டும்!'' என்று  தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
''பிகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், சோசலிசத் தலைவருமான கர்ப்பூரித் தாக்கூருக்கு  பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.  கடும் எதிர்ப்பையும் மீறி பிகார் மாநிலத்தில் 26% இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு உள்ளிட்ட சமூகப் புரட்சிகளை செய்த தலைவரான கர்ப்பூரி தாக்கூருக்கு அவரது பிறந்தநாள் நூற்றாண்டில் பாரதரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானது. இது அந்த விருதுக்கு பெருமை சேர்க்கும்.
 
சமூகநீதியையும், மதுவிலக்கையும் சாதித்துக் காட்டிய கர்ப்பூரித் தாக்கூருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் நாடு முழுவதும்  சமூகநீதித் தென்றல் வீசவும், மதுவிலக்கு மலரவும் வகை செய்யட்டும்!''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments