Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி ஒரு மனநோயாளி; மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (21:02 IST)
ராகுல் காந்தி ஒரு மனநோயாளி என்று மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல துறை இணை மந்திரியான அஷ்வினி குமார் சவுபே பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:- 
 
பிரதமர் மோடி வானம் போன்றவர். ஆனால் ராகுல் காந்தி ஒன்றும் இல்லாதவர். ராகுல் தன்னை சிறந்தவர், அறிவாளி, சரியானவர் என கூறி கொள்கிறார். ரபேல் ஜெட் ஒப்பந்தத்தில் மோடி ஒரு பொய்யர் என ராகுல் கூறுகிறார்.  
 
அவருக்கு ஸ்கைசோபிரீனியா என்ற மனநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இந்த வியாதியால் பாதிப்பு அடைந்தவர் மற்றவர்களை மனநோயாளி என கூறுவர்.  ராகுலை மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
 
ராகுல் காந்தியை மனநோயாளி என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments