Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி சென்ற விமானம் திடீரென திருப்பிவிடப்பட்டதால் பரபரப்பு.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (08:16 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாக்பூரில் இருந்து டெல்லிக்கு விமான மூலம் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி நேற்று நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அதன் பின்னர் டெல்லி செல்ல விமானத்தில் ஏறினார். இந்த நிலையில் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம் பனி காரணமாகவும் வெளிச்சமின்மை காரணமாகவும் டெல்லி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து டெல்லி செல்ல வேண்டிய அந்த விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகி வருவதை அடுத்து மூன்றாவது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

 நேற்று ஒரே நாளில் 60க்கும் மேற்பட்ட டெல்லி செல்லும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் ஜெய்ப்பூரில் இருந்து இன்று ராகுல் காந்தி டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments