ராகுல் காந்தி சென்ற விமானம் திடீரென திருப்பிவிடப்பட்டதால் பரபரப்பு.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (08:16 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாக்பூரில் இருந்து டெல்லிக்கு விமான மூலம் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி நேற்று நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அதன் பின்னர் டெல்லி செல்ல விமானத்தில் ஏறினார். இந்த நிலையில் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம் பனி காரணமாகவும் வெளிச்சமின்மை காரணமாகவும் டெல்லி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து டெல்லி செல்ல வேண்டிய அந்த விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகி வருவதை அடுத்து மூன்றாவது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

 நேற்று ஒரே நாளில் 60க்கும் மேற்பட்ட டெல்லி செல்லும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் ஜெய்ப்பூரில் இருந்து இன்று ராகுல் காந்தி டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments