Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை: ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (07:23 IST)
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை நீதிமன்றம் விதித்த நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார் என்பதும் அந்த மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரது எம்பி பதவி பறிபோனது. 
 
இந்த நிலையில் அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது குஜராத் நீதிமன்றம். 
 
மோடி என்ற பெயர் குறித்து விமர்சித்த அவதூறு வழக்கில், சூரத் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments