Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டம் எதிரொலி; பஞ்சாபில் முன்னிலை பெறும் காங்கிரஸ்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (12:43 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் போராடி வரும் நிலையில் பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த மூன்று மாத காலமாக பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவுகள் எட்டாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பெரும்பாலான நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் பல இடங்களில் பாஜக சரிவை சந்தித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாகவே தேர்தலில் பாஜக வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

அடுத்த கட்டுரையில்
Show comments