Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாவிட்டால் கட்டாய விடுப்பு: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (18:28 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
ஒரு சில மாநிலங்களில் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு பொதுமக்கள் அரசு ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் பஞ்சாப் அரசு அதிரடியாக இது குறித்த உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது 
 
செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தாத பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அறிவிக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். மருத்துவ காரணங்கள் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் முதல் தடுப்பூசி போடாமல் இருப்பவர்களுக்கு இந்த கட்டாய விடுப்பு என திட்டவட்டமாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இதனை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் தடுப்பூசி போடுவதற்கு அரசு ஊழியர்கள் பெருமளவில் முன் வந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments